கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்காவின் பொதுத் தேர்தலில் அப்போது அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். இதனால் அதிருப்தி அடைந்த அவருடைய ஆதரவாளர்கள் அமெரிக்காவின் கேப்பிட்டோல் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
அப்போது டெக்சஸ் மாகாணத்தைச் சேர்ந்த கை வெஸ்லி ரெட்ஃபிட் என்பவர் கையில் ஆயுதங்களுடன் கேப்பிட்டோலுக்குள் பிரவேசித்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அருகில் இருந்த சிறுவனையும் கொன்றுவிடுவதாக மிரட்டினார். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறை, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது. இதுதொடர்பான விசாரணை வாஷிங்க்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதுதொடர்பாக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் கை வெஸ்லி ரெட்ஃபிட் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 5 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக கை வெஸ்லி ரெட்ஃபிட்டுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குழு வரவேற்பு தெரிவித்துள்ளது.
Link Source: https://ab.co/3MQmAIf