Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தனியார் செவாலியர் கல்லூரியில் மாணவர்களை துன்புறுத்திய விவகாரம் : கைது செய்யப்பட்ட 74 வயது ஆசிரியர் பிணையில் விடுவிப்பு

74-year-old arrested teacher released on bail

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள Chevalier தனியார் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் Brian Napper 74 வயதானவர். இவர் ஆசிரியராக பணியாற்றிய 1980 களில் முறையே 1985 மற்றும் 1987ல் 13, 14 வயதுடைய இரண்டு ஆண் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட Brian Napper, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார். அவர் மீது பதியப்பட்ட 13 பிரிவு வழக்குகளில் 5 வழக்குகள் பாலியல் துன்புறத்தல் தொடர்பானது.

இந்நிலையில் Bankstown நீதிமன்றத்தில் Brian Napper தாக்கல் செய்த பிணை மனு விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தரப்பில் பிணை வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இதே போன்ற குற்றங்களுக்காக இவர் ஏற்கனவே தண்டனை பெற்றவர் என்பதும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.

74-year-old arrested teacher released on bail.அதே நேரத்தில் 2011 ம் ஆண்டு முதல் எந்தவித நீதிமன்ற கவனத்திற்கும் வராமல் அமைதியான முறையில் Brian Napper வாழ்ந்து வருவதாகவும், மருத்துவ தேவைகள் இருப்பதால் சிறையில் அது முறையாக கிடைப்பது கடினம் என்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இதனை அடுத்து சிறையில் அடைப்பதற்கான வலுவான சாத்தியக் கூறுகள் கொண்ட வழக்கு என்றாலும், வயது, மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுவதாக மாஜிஸ்திரேட் Michele Collnell தெரிவித்தார்.

Brian Napper தனது Lakemba இல்லத்திலேயே இருக்க வேண்டும் என்றும், வழக்கு தொடர்பாக எந்த சாட்சியங்களை சந்திக்க கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3nD9SBq