அடிலெய்டில் வீட்டின் ஒன்றில் திட்டமிட்டு எரிந்த தீ விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். அதிகாலை 4 மணியளவில் Woodville மேற்கில் Calendar பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்களும் பலத்த காயமடைந்தனர். உடனே அவர்கள் Royal Adelaide மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனையடுத்து போலீசார், தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். மேலும் அங்கு அதிகாரிகள் வருவதற்கு முன்னதாகவே தீயணைக்கப்பட்டது.
அடிலெய்டில் ஏற்பட்ட இந்த தீ விபத்து சொத்து வேண்டுமென்றே எரிக்கப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து அருகில் உள்ளவர்கள் கூறுகையில், தங்கள் வீட்டு கதவு தட்டப்பட்டதாலும், காயமடைந்த பெண் ஒருவரின் அழுகை குரல் கேட்டதாகவும் தெரிவித்தனர்.
குற்ற காட்சி புலனாய்வாளர்கள் மற்றும் துப்பறிவாளர்கள் ஆகியோர் இந்த விபத்து பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து வேண்டுமென்றே நடந்துள்ளதாக தெரிவித்தனர். தீ விபத்து நடந்த சாலை முழுவதும் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தை பற்றி யாருக்கேனும் ஏதாவது சந்தேகத்திற்கு இடமாக எந்த செயலை பார்த்தாலோ அல்லது கேள்விப்பட்டாலோ க்ரைம் ஸ்டாப்பர்களை அணுகுமாறு தெரிவித்தனர்.