Mark Ludgenau (37)என்பவர் வீட்டு வன்முறை சம்பவத்தால் குற்றம் சாட்டப்பட்டார் .தீவிரமாக தேடப்பட்ட அவர் ,தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் . ஆன்லைனில் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகின்றது ,அதனால் கோல்ட் கோஸ்ட் காவல் நிலையங்கள் பாதுகாப்பை அதிகரித்துள்ளன. அச்சுறுத்தல்களை தொடர்ந்து ஒரு எச்சரிக்கை நிலை இருக்கிறது மேலும் போலீஸ் Ludgenau-விடம் அமைதியாக சரண் அடையுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
போலீஸ் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது கோல்ட் கோஸ்ட் பள்ளியை மூடவும் வலியுறுத்தப்பட்டது. மேலும்,போலீஸ் அதிகாரிகள் குண்டு துளைக்காத ஆடைகளில் Ormeau-வின் புறநக பகுதிகளை சூழ்ந்தனர்.அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது.அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் வணிகர்களிடம் சந்தேகத்திற்கிடமான யாரேனும் வந்தால் போலீசிடம் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர், ஆனால் எந்த காரணத்திற்காகவும் அந்த நபரை அணுக வேண்டாம் எனவும் எச்சரித்தனர்.
Ormeau மாநில பள்ளியில் இருந்து மாணவர்களை, காலை 10 மணியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் போலீசார் மாணவர்களை அழைத்துச் சென்றனர், மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்களுக்காக காத்திருந்ததால், சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு அளவில் ஊரடங்கு அகற்றப்பட்டது.