Breaking News

தமிழகத்தில் 16 வது சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. 234 தொகுதிகளிலும் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இந்த தேர்தலில் 7 கோடியே 28 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2016 சட்டமன்ற தேர்தலை காட்டிலும் இம்முறை கூடுதலாக 25 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

The 16th Assembly elections in Tamil Nadu will be held tomorrow. The Election Commission has made arrangements in all 234 constituencies1இத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி இடையே போட்டி நிலவுகின்றது.

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று 1.58 லட்சம் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்னை காவல்துறை உட்பட்ட 30 சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் பயமின்றி வாக்களிக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.