Breaking News

நள்ளிரவு முதல் நாட்டின் பொதுமுடக்கம் ரத்து செய்யப்படுகிறது.. தெற்கு ஆஸ்திரேலியா அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று Premier எச்சரிக்கை !

தெற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஊரடங்கு சனிக்கிழமை நள்ளிரவு முதல் ரத்து செய்யப்படும். மேலும் Melbourne மக்கள் ஊரடங்கில் சில தளர்வுகளை எதிர்பார்க்கின்றார்கள்.

 Victoria-வில் கொரோனா வைரஸ் காரணமாக இருந்து வந்த கட்டுப்பாடுகள் தளர்துள்ள நிலையில் தெற்கு ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் பொதுமுடக்கம் ரத்து செய்யப்படுகிறது. சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த Premier Steven Marshall கடந்த 24 மணி நேரத்தில் ஒரேயொரு பாதிப்பு மட்டுமே பதிவாகியுள்ளது என்று கூறினார்.

எனினும் தெற்கு ஆஸ்திரேலியா இன்னும் அபாயகட்டத்தை தாண்டவில்லை என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிப்பதாக கூறினார். இருப்பினும் நாம் இந்த கட்டுப்பாடு தளர்வுகளை மேற்கொண்டுள்ளோம். மேலும் பலருக்கு வைரஸ் பரிசோதனைகள் மேற்கொண்டு தொற்று இருக்கிறதா என கண்டறிந்து, தொற்று இருப்பின் அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

 Parafield பகுதியில் உறுதிசெய்யப்பட்ட நபரோடு சேர்த்து மொத்தம் 26  பாதிப்புகள் அடங்கும். மேலும் இந்த தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்களால் சமூகத்தில் எந்த பாதிப்புமில்லை என மூத்த சுகாதார துறை அதிகாரி பேராசிரியர் Nicola Spurrier பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

South Australia-வில் சனிக்கிழமை நள்ளிரவோடு பொது முடக்கம் ரத்து செய்யப்படும். இருப்பினும், மதுபான கடைகள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும். மாநிலம் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று Premier Steven Marshall எச்சரித்துள்ளார். மேலும் Pizza பணியாளர்களிடம் விசாரணைகள் தொடரப்படும்.

 36 வயது மதிக்கத்தக்க இவர் தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் பணியிலுள்ளார். போலீஸ் அதிகாரிகள் மேலும் இருவரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். கடந்த வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் COVID-19 விதிகளை மீறியவர்கள் மீது 60 அபராதங்கள் மற்றும் 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

Adelaide பகுதி மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு தெற்கு ஆஸ்திரேலியாவின் எல்லை பகுதியை நம்பியுள்ளனர். இதனால் எல்லை தாண்டிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. Melbourne கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து Premier Daniel Andrews வரும் ஞாயிற்று கிழமை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தளர்வுகள் உணவகங்கள் மற்றும் திருமண நிகழ்வுகளில் தாராளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால், திங்கள் முதல் அதிகமான Victoria மக்கள் NSW மற்றும் ACT வருவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது. டிசம்பர் 7 முதல் மறுபறுசீலிக்கப்பட்ட விதிமுறைகளின் படி சர்வதேச வருகைகள் தொடரும்.கடந்த இரண்டு வாரங்களில் எந்த தோற்றும் உறுதி செய்யப்படாமல் NSW ஒரு milestone ஐ உருவாகியுள்ளது.

ஹோட்டல் தனிமை படுத்தலில்கடந்த 24 மணி நேரத்தில் 10 தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் சுற்றுலாவாசிகளில் 70 coronvirus தொற்று உள்ளவர்கள் உள்ளனர்.

100 க்கும் மேற்பட்ட கொரோனா இறப்பிற்கு பிறகு வயதானோருக்கான குடியிருப்பங்களில் மேம்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.வயது முதிர்ந்த தொற்று பாதிப்புக்குள்ளானோரை பராமரிப்பதில் மத்திய அரசுக்கு சவாலான ஒன்றாக இருக்கிறது. இந்த வருடம் 685 பேர் இறந்துள்ளனர். அதிகமான இறப்புகள் Victora வில் நிகழ்ந்துள்ளது. Aged Care Minister Richard Colbeck கூறுகையில் COVID-19 கட்டுப்பாடுகள் மூன்று அடுக்கு மாதிரிகளை கொண்டது என்று கூறினார்.

coronvirus இருக்கும் நேரத்தில் இந்த மூன்றாம் அடுக்கு மிக உயர்ந்தது. சமீபத்தில் வெளிநாடு சென்று வந்தவர்கள், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களோடு இருந்தவர்கள், உடல் நிலை கோளாறு உள்ளவர்கள் அனைவரும் தனிமைப்படுத்த, அல்லது தடுப்பு மருந்துகளை செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றனர்.