Breaking News

சிட்னியில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதால் பயண விதிகளில் மாற்றம் !

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், சில மாகாணம் மற்றும் பிரதேச தலைவர்கள், புதிய பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று, Covid-19 தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்து நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என NSW Premier Gladys Berejiklian எச்சரித்துள்ளார். விடுமுறை நாட்களை கழிக்க மாநிலங்களுக்கிடையே பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் மத்தியில், இந்த கட்டுப்பாடு மிக கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விக்டோரியா :

வெள்ளிக்கிழமை இரவு முதல், NSW -லிருந்து Victoria செல்பவர்கள் பயண அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். Northern Beaches Government Area -வில் வசிப்பவர்கள் இங்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. Northern Beaches ‘Red Zones’ ஆகவும், Greater Sydney ‘Amber Zone ‘ ஆகவும் மற்றும் மற்ற NSW பகுதிகள் ‘Green Zone’ ஆகவும் கருதப்படுகிறது. Amber Zones -லிருந்து செல்பவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ளவும், முடிவுகள் வரும் வரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 11-ஆம் தேதிக்கு பின்னர், Northern Beaches -லிருந்து Victoria வந்தவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து :

Northern Beaches -ஐ ‘Hot Spot’ ஆக Queensland சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். டிசம்பர் 11-ஆம் தேதிக்கு பின், அங்கிருந்து வந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்துகொண்டு, 14 நாட்கள் தனிமைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் டிசம்பர் 19ஆம் தேதிக்கு பின், அங்கிருந்து வந்தவர்கள் கண்டிப்பாக தங்கள் சொந்த செலவில் விடுதிகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

canberra :

Northern Beaches -க்கு Canberra மக்கள் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11-ஆம் தேதிக்கு பின் , அங்கிருந்து வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Western Australia:

NSW-விலிருந்து வருபவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, 11 ஆம் நாள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு வழிகாட்டு நெறிமுறைகளை Western Australian அரசு வழங்கியுள்ளது. NSW – க்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும், வருங்காலத்தில் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

The Northern Territory

Northern Beaches -லிருந்து வருபவர்கள், Alice Springs அல்லது Darwin -இல் அதிகாரிகளின் மேற்பார்வையில் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என Northern Territory அறிவித்துள்ளது.

டாஸ்மானியா:

Northen Beaches மிக அதிக அபாயம் உள்ள பகுதி என Tasmania சுகாதாரப் பணி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். டிசம்பர் 11-ஆம் தேதிக்கு பின் அங்கிருந்து வருபவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிக்காக வருபவர்க்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11-ஆம் தேதிக்கு பின் அங்கிருந்து வந்தவர்கள் தங்களைப் பரிசோதனை மேற்கொண்டு, தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

South Australia

Northern Beaches -லிருந்து வந்தவர்களுக்கு, தனிமைப்படுத்துதல் மற்றும் Covid-19 பரிசோதனை கட்டாயம் என South Australia தெரிவித்துள்ளது. மேலும் இரு மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்பவர்கள், கண்டிப்பாக அனுமதிபெற்றே பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.