Breaking News

ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்கு இலவச சுகாதார சேவையை வழங்கி வரும் அதிசய மருத்துவர் !

dr Syed Zia Hussain

மேற்கு சிட்னியில் உள்ள சையத் ஜியா உசேன் மருத்துவ கிளினிக்கில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேற்கு சிட்னியின் அருகிலுள்ள Rooty Hills-ல் உள்ள iFamily மருத்துவமனையில் காத்திருப்பு அறையில் நோயாளிகள் வரிசையாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே Covid-19 பாதுகாப்பான இடங்களுக்குடன் அமர்ந்திருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்று கிளினிக்கிற்கு புதிய முகங்களின் வருகையை கொண்டுள்ளது. மேலும் பலர் இந்த கிளினிக்கிற்கு வருவதற்காக Rooty Hills பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். பணம் ரீதியாக சிரமப்படுபவர்களுக்கு ஒரு மருத்துவர் இலவச சுகாதார சேவையை வழங்குவதை அவர்கள் கேள்விப்பட்டு இங்கு வருகின்றனர்.

தொற்றுநோய் ஆஸ்திரேலியாவை தாக்கியபோது கிளினிக்கில் உள்ள பயிற்சி வரவேற்பாளர் ஆயிஷா பா கூறுகையில், அவசரமாக நிறைய பேர் வருவார்கள் அந்த நேரம் அது பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது எனக் கூறினார். மேலும் அவர்களில் பலருக்கு மருத்துவரின் பெயரைக் கூட எப்படி உச்சரிப்பது என்று தெரியாமல் இருந்தது. அவர்கள் எனக்கு உதவக்கூடிய ஒரு டாக்டர் எங்கே இருக்கிறார் என கூறுவார்கள், பின்னர் நான் அது டாக்டர் ஜியா எனக் கூறுவேன்.

டாக்டர் சையது ஜியா தற்காலிக விசா வைத்திருப்பவர்களின் தேவையாகவே மாறிவிட்டார். ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் ஒரு மருத்துவ காப்பீட்டு அட்டை தகுதியற்றவராக இருக்கிறார்கள், அது என்னவென்றால் ஒரு மருத்துவர், மருந்துகள் மற்றும் மனநல சுகாதாரத்தை பார்ப்பதற்கான செலவுகளுக்கு உதவுவது ஆகும்.

பாகிஸ்தானில் ஆரம்பமானது:

நோயாளியிடம் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது டாக்டர் ஜீயாவை பொறுத்தவரையில் அவர் முன்பு செய்த ஒன்றேயாகும். அவர் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தார் அங்கு உள்ளூர் நோய்கள் பொதுவான ஒன்றாகும், அவர் தனது 13வது வயதில் காச நோயால் பாதிக்கப்பட்டார். நாட்டின் சுகாதார அமைப்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை பார்த்து கவலைப்பட்டார் மேலும் அவர் இளம் வயதில் மருத்துவராக அங்குள்ள ஒரு கிளினிக்கில் பணிபுரியும் போது பாதி பேருக்கு இலவசமாக சிகிச்சை அளித்தார்.

மேலும் நோயாளியிடம் பணம் இல்லை என்றால் நான் அவர்களிடம் ஒருபோதும் கட்டணம் வசூலிக்க மாட்டேன், மேலும் அவர்களுக்கு பணம் தேவைப்பட்டால் அவர்களுடைய மருந்துக்கும் சேர்த்தே பணம் செலுத்துவேன்.

டாக்டர் ஜியா இஸ்லாமாபாத் அரசு மருத்துவமனையில் கூட்டுறவு காலங்களில் செலவு பகிர்வும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இது அனைவருக்கும் இலவசமான ஒன்றாகவே இருந்தது. எனவே நாங்கள் எங்களுடைய சொந்த வார்டுகள் ஒரு நிதியை உருவாக்கினோம் அது மிகவும் பயனுள்ள அமைப்பாக இருந்தது எனக் கூறினார்.

ஒரு ராணுவ குடும்பத்தில் வளர்ந்த டாக்டர் ஜியா தனது குழந்தைப் பருவத்தை பாகிஸ்தானில் பல்வேறு இடங்களிலும் கழித்து வந்தார். மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் கர்ணலாக இருந்த அவரது தந்தை தான் அவருக்கு மருத்துவப் படிப்பைத் தொடர தூண்டினார். மேலும் டாக்டர் ஜியா கூறுகையில், “என் நினைவுகளை பொறுத்தவரையில் என் தந்தை எப்போதுமே ஒரு டாக்டராக வேண்டும் என ஆசைப்பட்டார், அவருக்கு வாய்ப்பும் பணமும் இருந்திருந்தால் அவர் ஒரு டாக்டராக ஆவதற்கு விரும்பியிருப்பார்.

மேலும் நான் வளர்ந்தவுடன் அவரைப் பெருமைப்படுத்த விரும்பினேன்,எனக் கூறினார். ஆனால் டாக்டர் ஜியாவின் தந்தை அவரது 46வது வயதில் குடல் புற்றுநோயால் விஷயங்கள் திருப்பத்தை ஏற்படுத்தியது.”நான் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது தந்தை இறந்த செய்தி தெரிய வந்தது, எனது தந்தை குடல் புற்றுநோய் இருப்பதை என்னிடமிருந்து மறைத்தார்,எனக் டாக்டர் ஜியா கூறினார். மேலும் புற்றுநோய் உடல் முழுவதும் பரவியிருந்தது. நோய் கண்டறிந்த 6 மாதங்களுக்குள் அவர் இறந்தார். அதற்குப் பிறகு வாழ்க்கை மிகவும் மனரீதியாக கடினமாகிவிட்டது எனவும் கூறினார்.

தந்தை இறந்த சோகத்திற்கு பிறகு டாக்டர் ஜியா அவரது நினைவாக தனது படிப்பை முடிக்க உறுதியாக இருந்தார். 2020 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த paramjit Kaur போன்றவர்களுக்கு இவர் பெரிய உதவியாக இருந்தார். எல்லைகள் மூடப்பட்டிருந்த போது Ms Kaur வீடு திரும்ப முடியாமல் ஆஸ்திரேலியாவில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முடக்குவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்துடன் இருந்த அவரை அவரது குடும்பத்தினர் கடைசியாக டாக்டர் ஜியாவை பார்க்க அழைத்து வந்தனர்.

Ms Kaur கூறுகையில் அவர் எல்லாரையும் தனது குடும்ப உறுப்பினர் போலவே நடத்துவார் எனக் கூறினார், மேலும் என்னைப் போன்றவர்களுக்கு முக்கியமான ஒன்று தனது உடல் நிலையையும் தனது மொழியையும் புரிந்து கொள்வதாகும்,ஆனால் இவர் எளிதாக புரிந்து கொண்டு பிரச்சனைகள் என்னவென்றும் தெளிவாக விளக்குகிறார்‌. ஆனால் டாக்டர் ஜியாவை பொறுத்தவரையில்,”நீங்கள் மக்களுக்கு உதவும் போது, அவரது கண்களில் கண்ணீரை காணலாம் அதுதான் நான் ஒரு மருத்துவர், ஒரு நபர் மற்றும் ஒரு தொழில்முறை நிபுணர் என என் இதயத்தை அரவணைக்கிறது” எனக் கூறினார்.