Breaking News

தவறான தடுப்பூசி கொடுத்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து -சுகாதார அமைச்சர் !

Termination of the contract of the company that gave the wrong vaccine-says Greg Hunt

இரண்டு வயதானவர்ளுக்கு அதிக அளவு மருந்தை பயிற்சியில்லாத மருத்துவர் செலுத்தியதால் அதற்கு காரணமான நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், Healthcare Australia மருத்துவரின் பயிற்சி குறித்து தவறான கருத்துக்களை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. இதனுடைய தலைமை நிர்வாகி Jason-னும் இதற்கு உடந்தையாக இருக்கலாம். இதற்கு மன்னிப்பு கோரும் விதத்தில் அறிக்கை ஒன்றை Healthcare Australia’s chairman Daren McKennay அளித்தார்.

Termination of the contract of the company that gave the wrong vaccineஅதில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கும் மிகவும் வருந்துகிறோம். மன்னிப்பு கேட்கிறோம். இவ்வாறான தவறு மீண்டும் நடக்காது என்று உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனம் தனது உறவை மத்திய அரசுடன் சரிசெய்ய முயற்சிக்கும் பொது இடைநிலை CEO தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த நிறுவனம் ஆஸ்திரேலியா முழுவதும் மருத்துவ வரலாற்றில் நீண்ட காலமாக உள்ளது. ஆனால் அவர்கள் மீது வெளிப்படையான குற்றச்சாட்டு இருக்கிறது.

இதுவரை 70வயது முதியோர் இல்லத்திற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது இந்த வார இறுதிக்குள் 240 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சரியான பாதையில் செல்லும்.

இந்த அளவிற்கு அதிகமான மருந்து செலுத்தியதால் மக்களிடையே தடுப்பூசி பற்றிய நம்பிக்கை குறைந்துள்ளதாக கூறியது. வயதான அந்த இருவருக்கும் எந்தவிதமான எதிர்விளைவுகளும் ஏற்படவில்லை.
NSW மற்றும் குயின்ஸ்லாந்தில் தடுப்பூசி போடும் ஒப்பந்தத்தை Healthcare Australia செய்திருக்கிறது. மற்ற மாநிலம் மற்றும் பிரதேசங்களில் Aspen Medical ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஹெல்த்கேர் ஆஸ்திரேலியா மூத்த நிர்வாகம் மற்றும் முன்னாள் தலைமை நர்சிங் அதிகாரி Debra Thoms ஒரு பகுதியாக இருப்பார். இத்திட்டம் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்க குயின்ஸ்லாந்து அமைச்சரவையை கூட்ட கேட்டுள்ளது.

துணை தலைமை மருத்துவ அதிகாரி Michael Kidd இந்த தவறு பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த Covid 19 தடுப்பூசி திட்டத்தின் முதன்மையான நோக்கம் மக்களுடைய பாதுகாப்பு. தரம் மற்றும் பாதுகாப்பு மீறல்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.