NSW-ல் கடந்த 10 ஆண்டுகளில் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கூடிய வழிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஹெலிகாப்டர் மற்றும் மீட்புக் படகுகளின் உதவியுடன் NSW Hawkesbury, Upper கொலோ நதியை சுற்றி சிக்கித் தவிக்கும் குடியிருப்பு மக்களை வெளியேற்ற அவசர சேவைகள் திட்டமிட்டுள்ளன.
மாநில அவசர சேவை (SES) இப்பகுதியில் வசிப்பவர்களை தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறது. சில பகுதிகளில் தீவிர வானிலை உயிருக்கு ஆபத்தானதாக இருக்கும் எனவும் எச்சரிக்கிறது. மேலும் மத்திய கடலோர பகுதிகளான, Sydney Metro,Lower Hunter மற்றும் Illawarra உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழை இன்று பிற்பகலில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டீல் ராக்ஸின் தெற்கு கடலோரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் 90 கிலோ மீட்டருக்கு மேல் அதிகமாக காற்று வீசுவதால், இங்கு மணிக்கு 60 கிலோமீட்டர் முதல் 70 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்ற எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளது. மீட்புப் பணிகளில் SES சுமார் 2000 பேரை நிறுத்தியுள்ளது மற்றும் பிற அவசர சேவைகள் கடந்த இரண்டு நாட்களாக பிஸியாக இருக்கின்றன. மேலும் 2000 அழைப்புகளை ஏற்று 870 மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
இரண்டு பெரிய அமைப்புகள் மோதியதில் 10 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் வானிலை எச்சரிக்கையின் கீழ் இருப்பதாக எச்சரித்துள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவில் மட்டும் பிரதான நிலப்பரப்பில் வெள்ளம் பாதிக்கவில்லை. பலத்த மழை மற்றும் சேதப்படுத்தும் காற்று போன்றவற்றிற்கான எச்சரிக்கைகள் அலாஸ்கா போன்ற ஒரு பகுதியை உள்ளடக்கியதாத இருக்கிறது.
தேடல் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர்களை ஆஸ்திரேலியா பாதுகாப்பு படை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு அனுப்பும். மேலும் தேடல் மற்றும் மீட்பு வண்டிகள் பகல் மற்றும் இரவு முழுவதும் வேலை செய்ய முடியும். மேலும் இதை செய்வதற்கு சில துணை பணியாளர்களும் வருவார்கள் என அவசரநிலை மேலாண்மை அமைச்சர் David Little proud கூறினார்.