கடந்த 2 மில்லியன் ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றம் பூமியில் நடந்து வருகிறது. அப்படி நடந்த ஒரு பருவநிலை மாற்றம் வாயிலாக மனித இனம் பரிணாம வளர்ச்சி அடைந்ததாக நம்பப்படுகிறது. பூமியின் காலநிலை மாற்றங்களை ஆய்வு செய்த போது, தொல்பொருள் மற்றும் புதைபடிமங்கள் கண்டறியப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வ்கள் தொடக்க காலம் முதலே நடந்து வருகிறது. அதன்படி சமீபத்திய ஆய்வு, ஆஃப்ரிக்காவின் குறிப்பிட்ட பகுதியில் சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் பரிணாம வளர்ச்சி அடைந்தது தெரியவந்துள்ளது. இதற்கு பூமியின் காலநிலை மாற்றமும் உறுதுணை செய்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தென் ஆஃப்ரிக்காவின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் பல்வேறு இடங்களில் மனித இனம் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. அவர்கள் மூலம் பல்வேறு மனிதர்கள் தோன்றியதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.