Breaking News

பழங்குடி இனத்தை சேர்ந்த தாய், மகள் மீது இனவெறி தாக்குதல் !

நெற்றியில் சுவஸ்திக்கை பின்னோக்கி வரைந்திருந்த நபர் Perthல் ஒரு அப்பாவி தாயையும், அவரது 15 வயது மகளையும் இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gosnells shopping centre பாதுகாப்பு கேமராவில் ஒரு மனிதன் கையில் deodorant can மற்றும் gas lighter-ரையும் எடுத்து சென்றதாகவும், அவனது கண்ணிற்கு கீழ் Nazi symbol தவறாக paint செய்யப்பட்டதாகவும் காணப்பட்டது.

Racist attack on tribal mother and daughterஇது குறித்து WA போலீஸ் அதிகாரி கூறும்பொழுது, அந்த தாயும், மகளும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த நபர் தாயின் மீதும் அவளது மகள் மீதும் தீப்பிழம்புகளை வெடிக்கச் செய்துள்ளதாகவும், 40 வயதான தாயின் கையில் சிறு தீக்காயங்களும், அவரது மகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறினார்.

Detective Senior Sergeant Sean Bell இதைப்பற்றி கூறும்பொழுது, இரவு உணவு அருந்த வெளியே வந்த தாயின் மீதும், மகளின் மீதும் நடந்த தாக்குதல் கொடூரமானது. சமுதாயத்தில் இனம் மீதான செயல்கள் இருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அவ்வாறு இருப்பது தீவிரமாக கருதப்படும் என்று கூறினார்.

ஆயுதமேந்திய சிறையிலிருந்து தப்பிப்பதற்கு திட்டமிட்டதற்காக இரண்டு Perth Neo-Nazis-ஐ போலீஸ் குற்றம் சாற்றியதாக கூறப்படும் ஒரு வாரத்திற்குள் இந்த சம்பவம் நடந்தது. நேற்று நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் sophisticated (அதிநவீன)மானது என்று போலீசார் நம்பவில்லை.