Perth’s வடகிழக்கில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத தீ விபத்தால் 80க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. பெரும் காற்று வீசுவதால், தீயணைப்பு வீரர்கள் 4வது நாளாக தீயை அணைக்க போராடி வருகின்றனர். 126 கி.மீ. சுற்றளவு கொண்ட massive blazeலிருந்து hills town of Wooroloo வின் பல வீடுகளை அழித்தபின் கடற்கரையோரமாக வடகிழக்கு பகுதிக்கு சென்றது. செவ்வாய்கிழமை அன்று, இழந்த சொத்துக்களின் மதிப்பீடு 56 ஆக இருந்தது, புதன்கிழமை 71 ஆக உயர்ந்ததுள்ளது.
மாநில முதல்வர் Mark McGowan கூறுகையில், 81 வீடுகள் தீ விபத்தில் எரிந்ததாக மதிப்பீட்டு குழுக்கள் தெரிவித்துள்ளன. இந்த காட்டு தீயினால் ஏற்பட்ட அழிவு ,அளவுக்கு அதிகமாக உள்ளது. வீடுகளை இழந்தவர்களின் வாழ்வாதாரம் குறித்து கவலை கொள்கிறோம். தீயை எதிர்த்து போராட NSW-விலிருந்து இரண்டாவது விமான டேங்கர் Perthக்கு வந்துள்ளது என்றார்.
தீயணைப்பு வீரர்களின் முயற்சியால், Avon Ridge Estate, Shady Hills View, Gidgegannup’s north மற்றும் the Great Northern Highwayல் வீடுகளில் தீ பரவுவது தடுக்கப்பட்டது. 55வயதான முன்னாள் தீயணைப்பு வீரர் Stewart Brisbane, North of the blazeல் இருக்கும் தனது கிராமப்புற சொத்துக்களை அங்கேயே தங்கி பாதுகாத்தார். மக்கள் ஒற்றுமையுடன் தீயை எதிர்த்து போராடினர். ஆனால் தீ பரவுவது குறையவில்லை.
Mr Brisbane கூறுகையில், வியாழக்கிழமை நிலைமை சீராக இருந்தது. ஆனால் வலுவான காற்று மேற்கு மற்றும் வடக்கு எல்லையில் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்று வேகமாக வீசினால் இது பரவும் அபாயம் உள்ளது. இது காற்றை பொறுத்து தான் பாதிப்பு இருக்கும் என்றார். பிரதமர் Scott Morrison கூறுகையில், நிலைமை மிகவும் ஆபத்தமாக உள்ளது. காற்று 60 & 70 கி.மீ மணி நேரத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என்றார்.
Shady Hills View, Bullsbrook’s east & north of Gidgegannup. பகுதியில் உள்ள மக்களை அவர்களது வீட்டை விட்டு வெளியேற வேண்டும். பத்திரமாக உங்கள் வீட்டின் வெளியே எளிதாக தப்பிக்கும்படி உள்ள இடத்தில் இருக்க மேற்கு ஆஸ்திரேலியாவின் Department of Fire and Emergency Services எச்சரிக்கை விடுத்தது.
8 கி.மீ. அகலத்தில் Werribee சாலையில் தொடங்கிய காட்டுத்தீ இப்பொழுது 21 கி.மீ ஆக உள்ளது. DFES Superintendent Peter Sutton கூறுகையில், இது மிகவும் கடினமானதாகவும், சிக்கலாகவும் உள்ளது. நீண்ட செயலாக இருக்கும். இதற்கு குறைந்தது ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் செல்லப்போகிறது. வானிலையும் சரியாக இல்லை. 800 மின்கம்பங்கள் மற்றும் 100 மின்மாற்றிகள் தீப்பிடித்து எரிந்ததால் 1300க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக வளாகங்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளன என்றார்.