மெல்பேர்னிலுள்ள டைசன் பகுதியில் பேருந்து ஓட்டும் ஊழியர்கள் பணி முன்னேற்றம் மற்றும் ஊதிய உயர்வுகள் வேண்டும் என பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இவர்களை பணியில் அமர்த்தியுள்ள போக்குவரத்து நிறுவனங்கள், அரசாங்கம் அவர்களுக்கு வழங்கும் ஊதிய மானியங்களை பங்கிட்டு தர மறுப்பதாக ஊழியர்கள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.
இதனால் டைசன்ஸில் உள்ள போக்குவரத்து ஊழியர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுடைய மாத வருமானத்தில் 2.19 சதவீத ஊதிய உயர்வு மற்றும் பணி முன்னேற்ற நடவடிக்கைகளைக் கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் மெல்பேர்னின் முக்கிய பகுதிகளில் குறைந்தளவிலான பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் போக்குவரத்து துறை அமைச்சகம் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும் என செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.