நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்த நிலையில் பிப்ரவரி 21ஆம் தேதி சர்வதேச எல்லைகளில் திறக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
கோவிட் பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இரண்டு ஆண்டுகள் சர்வதேச எல்லைகள் முழுவதுமாக மூடப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலான கொண்டாட்டங்கள் நிகழ்வுகள் ஆகியவை இதன் காரணமாக ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போது தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதால் பிப்ரவரி 21 முதல் சர்வதேச எல்லைகளைக் படுவதாகவும் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் மேலும் சில மாதங்களுக்கு நீடிப்பதாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக விசா பெற்று காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக படிப்படியாக அனைத்து விசாரணைகளும் ஆஸ்திரேலியா வருவதற்கான அனுமதி விரைந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்து, ஜப்பான், சிங்கப்பூர், வட கொரியா 8 நாடுகளுக்கு சில மாதங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளில் விலக்கு அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா வருவதற்கான கோவிட் நெகட்டிவ் சான்று கட்டாயம் என்றும், சுற்றுலா பயணிகள் ஆஸ்திரேலியாவின் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படுவதாகவும், சர்வதேச பயணிகளுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ள நிலையில் அவர்கள் முதலாவதாக எந்த நாட்டில் இருந்து வருபவர்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சீனா மற்றும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பயணிகளை அதிக அளவில் வருகை தந்திருப்பதாக இரண்டு அல்லது மூன்றாவது பயணிகளாக அவர்கள் இருக்கக்கூடும் என்றும், இதற்கு முந்தைய பயணிகளின் வருகை குறித்த விவரங்கள் அதனை தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.
2018 – 2019 காலகட்டத்தில் ஒட்டுமொத்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகபட்சமாக 15.4 சதவீதம் ஏணிகள் சீனாவிலிருந்தும் இதற்கு அடுத்தபடியாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களும் வருகை தந்துள்ளனர். குறிப்பிட்ட காலகட்டத்தில் இவர்கள் மூலமாக ஆஸ்திரேலியாவில் 44.5 பில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Today’s எல்லைகள் திறக்கப்படும் அதே நேரத்தில் பயணிகள் வருகை தரும் நாடுகளில் தற்போது தொற்று பாதிப்பு நிலை என்னவாக இருக்கிறது அங்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கும் சதவீதம் உள்ளிட்ட விவரங்களையும் கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பயணிகளின் வருகையும் அவர்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3rBNivr