கடந்த வியாழன்று பணமோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கிய ரஷ்யாவின் சுலைமான் கெரிமோவுக்கு சொந்தமான சொகுசு படகு ஃபிஜி தீவில் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.
குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள சுலைமான் கெரிமோவ், கடந்த 2018-ம் ஆண்டு சிரியாவில் ரஷ்யா படையெடுப்புக்கு விதிட்டத்தற்கு முக்கிய காரணமானவர் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். அதேபோன்று உக்ரைனில் ரஷ்யா படையெடுப்புக்கும் அவர் தன காரணம் என்று தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக விசாரணையை நடத்துவதற்கு ஃபிஜி நாட்டின் பசிஃபிக் கடலில் நிறுதப்பட்டுள்ள சுலைமான் கெரிமோவுக்கு சொந்தமான கப்பலை சோதனையிட அமெரிக்க புலானாய்வு துறை முடிவு செய்தது. அதற்காக அந்நாட்டு நீதிமன்றத்தை அணுகி உரிய அனுமதியை அமெரிக்க பெற்றது. விவகாரம் தொடர்பாக சொகுசுப் படகை சோதனையிட்ட அதிகாரிகள், முக்கிய சாட்சியங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணையை நடத்தும் பொருட்டு அதுவரை சொகுசுப் படகு ஃபிஜி தீவில் இருகும் என்று அமெரிக்க எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.