Breaking News

விக்டோரியாவிற்கு இன்னும் சில வாரங்களில் NSW எல்லை திறக்கப்படுகிறது !

விக்டோரியா தொடர்ந்து ஐந்தாவது நாளாக தொற்று எதுவும் பதிவாகாததால், NSW மற்றும் விக்டோரியாவிற்கு இடையிலான எல்லை மூன்று வாரங்களில் திறக்கப்படும் என்று Gladys Berjiklian அறிவித்துள்ளார்.

நவம்பர் 23 நள்ளிரவு முதல் NSW மற்றும் விக்டோரியாவிற்கு இடையே தடையில்லாத இயக்கம் இருக்கும் என்று புதன்கிழமை Ms Berjiklian தெரிவித்தார்.

மேலும் , தொற்று நோய் தொடங்கி 7 மாதம் ஆனபிறகும் விதிகளை கடைபிடிக்காததால் நவம்பர் 23 முதல் இடங்களுக்கு QR codes கட்டாயமாக்கபடும்.

NSW-வில் கடந்த செவ்வாய் அன்று 24 மணி நேரத்தில் 17,000-ற்கும் மேற்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட்து. அதில் உள்ளூரில் பரவிய மூன்று தொற்றுகளும் வெளி நாட்டிலிருந்து திரும்பிய பயணிகளிடம் ஆறு தொற்றுகளும் கண்டறியப்பட்டது.மூவரும் ஏற்கனவே தனிமைப் படுத்தப்பட்டவர்களின் தொடர்புகள்.

Sydney siders மாநிலத்திற்குள் நுழையக் கூடாது என்று Queensland premier Annastacia Palaszczuk எடுத்த முடிவிற்கு Ms Berjiklian தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதால் எல்லை அறிவிப்பு வந்துள்ளது.இருதலைவருக்கும் இடையில் உள்ள உறவு சுமூகமாக இல்லை என்பதை Ms Berjiklian ஒப்புக்கொண்டுள்ளார்.

செவ்வாய் அன்று அறிவிக்கப்பட்ட ஒரு உள்ளூர் தொற்று Jasmins1 உடைய ஊழியர். அந்த உணவகத்திற்கு அக்டோபர் 26 மற்றும் 31 தேதிகளில் அல்லது நவம்பர் 1 ஆம் தேதி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கலந்து கொண்டவர்கள் சோதனை மேற்கொண்டு 14 நாட்கள் தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

விசாரணையில் உணவகத்தில் கோவிட் பாதுகாப்பு திட்டம் ஏதும் இல்லை என்று NSW Health தெரிவித்துள்ளது.