Breaking News

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று.. Northern beaches-இல் ஏற்பட்ட தொற்று 110 ஆக அதிகரிப்பு !

NSW-வில் ஏழு புதிய கொரோனா பதிவு செய்துள்ளது.வியாழக்கிழமை இரவு 24 மணி முதல் இரவு 8 மணி வரை கிட்டத்தட்ட 70,000 சோதனைகளில் இருந்து பதிவு செய்யப்பட்டன.

Northern Beaches cluster-இல் ஏற்பட்ட பாதிப்பு 110 ஆக அதிகரித்து உள்ளது .ஒரே நாளில் கிட்டத்தட்ட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படி NSW premier Gladys Berejiklian எச்சரித்துள்ளார்.

Circular Quay-இல் உள்ள Paragon Hotel-இல் மூன்று தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது .டிசம்பர் 16 ஆம் தேதி மதியம் 12.45 முதல் 3.30 மணி வரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஹோட்டலுக்குச் சென்ற யாராக இருந்தாலும் ,14 நாட்களுக்கு உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்று NSW Chief Medical Officer Kerry Chant கூறியுள்ளார்.

Australia Square, the MLC மையம் மற்றும் Chiefly Square உள்ளிட்ட நகரின் வடகிழக்கு பகுதியில் உள்ள யாராக இருந்தாலும் கொரோனா அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வடக்கு கடற்கரைகளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது,கிறிஸ்மஸைக் கொண்டாடும் மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் முடிந்தால் திறந்த வெளியில் கொண்டாடும் படி வலியுறுத்தப்படுகிறார்கள் . ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டிலேயே இருக்குமாறு டாக்டர் சாண்ட் கூறினார்.