Breaking News

சென்னையில் ஏற்பட்ட சூறாவளி புயலில் சிக்கிய SS Stamatis கப்பல் சென்னை மெரீனா பீச் கடற்கரையில் தரைதட்டி நின்ற தினம் இன்று. ( 06 நவம்பர் 1966 )

சென்னையில் ஏற்பட்ட சூறாவளி புயலில் சிக்கிய
SS Stamatis
கப்பல் சென்னை மெரீனா பீச் கடற்கரையில்
தரைதட்டி நின்ற தினம் இன்று.
( 06 நவம்பர் 1966 )

கடற்கரையில் தரைதட்டி நின்ற கப்பலை பார்க்கும் மக்கள் மற்றும் 1967 ல் வெளியான “நெஞ்சிருக்கும்வரை” திரைப்படத்தில் “நெஞ்சிருக்கும் எங்களுக்கு” பாடலின் காட்சியில் இக்கப்பல்.

இக்கப்பலை உடைத்து எடுப்பதற்காக ஏலத்தில் விடப்பட்டு ஏலத்தில் எடுத்தவர்கள் மண்ணுக்குள் முங்கிய பகுதிகளை விட்டுவிட்டு சென்றதால், கடலில் நீந்தியவர்கள் பலர் இதில் சிக்கி இறந்தனர், தொடர்ந்து 1983 பொங்கல் திருநாளில் பலர் கடலில் நீந்தி இதில் சிக்கி இறந்ததால் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தால் 1990 ல் முழுமையாக இதன் பகுதிகள் மீட்கப்பட்டது.