Breaking News

Clive Palmer வெற்றி ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த வெற்றி என்று -WA Premier Mark McGowan கூறியுள்ளார்!

West Australian Premier Mark McGowan ,Clive Palmer-க்கு எதிராக தனது மாநில உயர்நீதிமன்ற வெற்றி ஆஸ்திரேலியர்களுக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தாக்குதல் காரணமாக மாநிலத்தின் எல்லை மூடல் உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.Perth-இல் செய்தியாளர்களிடம் பேசிய போது , இது இந்த மாநில மக்களுக்கு கிடைத்த வெற்றி, இது ஆஸ்திரேலியா மக்கள் அனைவருக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று கூறியுள்ளார்.

மேற்கு ஆஸ்திரேலியா மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலனைப் பாதுகாப்பதில் எல்லை மூடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தில் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக மத்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது, மேலும் Scott Morrison பொதுமக்களிடையே எந்தவிதமான பதற்றத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்று கூறினார். இரண்டு நாட்கள் விசாரணைக்கு பிறகு வெள்ளிக்கிழமை காலை தீர்ப்பு வழங்கப்பட்டது.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி Susan Kiefel, Plague அல்லது தொற்றுநோயின் போது பயன்படுத்தப்படும் அவசரகால சட்டங்கள் அனைத்தும் 92 வது பிரிவின் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் என்று கூறினார்.

நீதிமன்றம் வெளியிட்ட முடிவுக்கான காரணங்களை விரைவில் வெளியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.Mr Palmer-க்கு மே மாதம் WA செல்ல அனுமதி மறுத்த பின்னர் தனது சட்டபூர்வமான நடவடிக்கையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 14 ஆம் தேதி வரவிருக்கும் எல்லை மூடல் ஒரு தேவையில்லாத வேலை என்று அவரது சார்பாக வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.கொரோனா வைரஸ் மாநிலத்திற்குள் பரவுவதற்கான அபாயத்தைக் குறைக்க எல்லை மூடல் நியாயமானதாக WA வாதிட்டது, கொரோனா வைரஸ் தொற்றுநோயை விட கடுமையான காரணம் எதுவும் இல்லை என்றும் கூறினார்.

இவர்களிடையே நடந்த விவாதத்தில்,NSW தவிர மற்ற மாநிலங்களும், பிரதேசங்களும் WA-வை ஆதரித்தன.