இன்று வ.உ.சி. நினைவு தினம்
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், தென்னாட்டு திலகர் என்று போற்றப்பட்டவர் வ.உ.சிதம்பரனார். வந்தே மாதரம் என்று முழங்கி வெள்ளையரை வெகுண்டோடப் செய்த தேச பக்தர். அவர் பிறந்த ஒட்டப்பிடாரம் என்ற ஊரின் பெயரை உச்சரித்தாலே நாடி நரம்புகளின் வீரம் பாய்ந்தோடும். சிறைவாசத்தின் போது அவர் மாடுபோல் நடத்தப்பட்டு அவர் இழுத்த செக்கு இன்னும் கோவை சிறையில் வ.உ.சி.யின் வரலாற்றை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.