Breaking News

வடக்குக் கடற்கரையில் ஏற்பட்ட தொற்று 104 ஆக அதிகரித்துள்ளது…NSW வில் 9 புதிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது !

NSW-வில் 60,000-க்கும் அதிகமான எடுக்கப்பட்ட சோதனையில் 9 புதிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. Northern beaches-இல் ஏற்பட்ட பாதிப்பு தற்போது 104 ஆக அதிகரித்துள்ளது. தற்போது NSW பதிவாகியுள்ள வழக்குகளில் 7 புதிய தொற்றுகள் Northern beaches-வழக்குகளுடன் தொடர்புடையவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கடைசி 24 மணி நேரத்தில் மாநில அளவில் 8 புதிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது.இந்த பாதிப்பு சங்கிலியை போல் நீண்டு கொண்டே இருப்பதால் மக்கள் வெளியே செல்வதை குறைத்துக் கொள்ளுமாறு Premier Gladys Berejiklian வலியுறுத்தியுள்ளார் .

CBD-இல் வேலைக்கு சென்ற சிலருக்கு கொரோனா தொற்று இருந்ததால், இவர்களைப் பற்றி தாம் மிகவும் கவலைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அவை அனைத்தும் Northern beaches, Avalon தொற்றுடன் தொடர்புடையது. கிறிஸ்துமஸ் காலத்தின் பொழுது ஒன்று கூறுவதையும்,வெளியே அதிகமாக செல்வதையும் முடிந்தவரை குறைத்துக் கொள்ளுமாறு chief health officer Kerry chant வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது வெளியே செல்ல நேர்ந்தால் அது காற்றோட்டமான திறந்தவெளியாக இருந்தால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.Circular quay அருகில் இருக்கும் loftus தெருவில் இருக்கக்கூடிய Paragon ஹோட்டலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்தவர்கள் சென்று வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிந்தவரை மக்கள் பண்டிகை நாட்களில் ஒன்று கூடுவதை, குறைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். மேலும் Northern beaches போலீஸ் பாதுகாப்பு அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தன்று பட்டாசு வெடித்து கொண்டாடுவதை ரத்து செய்து கொள்ளுமாறு ஆஸ்திரேலியா மருத்துவ சங்கம் ,NSW அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க மிகவும் கடினம் என்றும் Ms Berejiklian கூறியுள்ளார் .