பிரிஸ்பனில் ஒரு தம்பதியினர், தங்களுக்கான உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தனர்.வெகுநேரமாகியும் உணவு அவர்களுக்கு வந்து சேரவில்லை. என்ன காரணம் என்று தெரியாமல் பசியால் தவித்துக் கொண்டிருந்தனர்.பொறுமை இழந்த அவர்கள் தங்கள் வீட்டின் முன்பகுதியில் சிசிடிவி பதிவை பார்க்கலாம் என்று எண்ணினார்கள்.
சிசிடிவி பதிவை பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி தரும் காட்சி காத்திருந்தது .அந்த பதிவில் ஒரு இந்திய வம்சாவளி தொழிலாளி ஒருவர் உணவு பார்சலை கொண்டு வந்த காட்சி பதிவாகி இருந்தது.ஆனால் பின்பு நடந்தது தான் இக்காட்சியின் க்ளைமாக்ஸ்.
உணவு கொண்டு வந்த நபர் Turban அணிந்திருந்தார். அவர் Hello Fresh Box ஐ கொண்டு வந்து கதவின் அருகே வைத்தார். அதை தனது மொபைல் போனில் புகைப்படம் எடுத்து விட்டு அந்த உணவு பார்சலை அவரே எடுத்து சென்று விட்டார். இந்த சிசிடிவி காட்சி பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.