கடந்த திங்கட்கிழமை அன்று டான்ஸ்மானியாவின் முதல்வராக இருந்து வந்த பீட்டர் கட்வெயின் பதவி விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார். கொரோனா பெருந்தொற்றால் தான் சலிப்படைந்துவிட்டதாகவும், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புவதாகவும் அதற்கு காரணம் கூறினார்.
இதையடுத்து டாஸ்மானியாவின் அடுத்த முதல்வராக தற்போது துணை முதல்வராக இருக்கும் ஜெரிமி ராக்லிஃப் பதவியேற்கவுள்ளார். அதற்கான நடைமுறை நடப்பு வார இறுதியில் துவங்குகிறது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஜெர்மினி ராக்லிஃப் துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
கடந்த 2010-ம் ஆண்டு சாண்ட்ரா நோல்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ராக்லிஃப். தற்போது இந்த தம்பதிக்கு ரூபி, லூசி மற்றும் ஹாலி என மூன்று மகள்கள் உள்ளன. லிப்ரல் கட்சியின் முக்கிய தலைவராக இருக்கும் இவர், டாஸ்மானியாவின் வடமேற்கு பகுதியில் பெரும் சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார். ஆனால் அடிப்படையில் தன்னை ஒரு விவசாயிகாக அடையாளப்படுத்திக் கொண்டார். மக்களின் ஆதரவும் இவருக்கு உள்ளது. இதனால் அடுத்த தேர்தலில் டாஸ்மானியாவின் முதல்வர் பதவிக்கு ஜெரிமி ராக்லிஃப் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெரிமி ராக்லிஃப் முதல்வரானது, துணை முதல்வர் பதவி இருக்காது என்று கூறப்பட்டது. ஆனால் டாஸ்மானியாவின் போக்குவரத்து துறை அமைச்சர் மைக்கேல் ஃபெர்கியூசன் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் எலீஸ் ஆர்ச்சர் இருவரும் அடுத்த துணை முதல்வராக பதவி வகிக்க தாங்களே முன்வந்து விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக டாஸ்மானியா மாகாணத்தின் அடுத்த துணை முதல்வராக யார் அறிவிக்கப்படக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு எதிர்க்கட்சி, அரசியல் விமர்சகர்கள் உட்பட பொதுமக்களும் பெருமளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.
Link Source: https://ab.co/3DR6fi8