சமூகவலைதளங்களில் விக்டோரியாவில் துவங்கியுள்ள பனிப்பொழிவு குறித்த புகைப்படங்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. பீச்வொர்த் மற்றும் ஸ்டான்லீ பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஆஸ்திரேலியாவில் இந்தாண்டுக்கான முதல் குளிர்காலம் தங்களுடைய வாழ்விடப் பகுதியில் ஏற்பட்டுள்ளதை நினைத்து பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் விக்டோரியாவின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தாண்டு ஆஸ்திரேலியாவின் பல இடங்களில் கடுமையான குளிர்காலம் நிலவும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு இயல்பை மீறிய குளிர்ந்த வானிலை நிலவும் என்று தகவல் வெளியிட்டுள்ளது.