ஆஸ்திரேலியாவுக்குள் கொரோனா பரவல் தொடர்ந்ததை அடுத்து. பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது, பொதுமக்கள் வெளியே நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் குளிர்காலத்தை பொதுமக்கள் அனுபவிக்க முடியாமல் போனது.
இந்தாண்டும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு இடங்களில் கொரோனா பரவல் இருந்தாலும், தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இதனால் இரண்டாண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் வெளியே வந்துள்ளனர். குளிர்காலத்தை அனுபவித்து வருகின்றனர். இதுதொடர்பாக மெல்பேர்னிலுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் மார்டி ஃபிலோயி பேசுகையில், கொரோனா பரவல் தொடர்பான உடனடித் தகவல்கள் மத்திய அரசுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஊரடங்கு, பொதுமுடக்கம் குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.