நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு முடக்க நிலை மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 345 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்ட 90 வயது நபர் மற்றும் 30 வயதுடைய நபர் ஆகிய இருவர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததாகவும் நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் Gladys Berejiklian தெரிவித்துள்ளார்.
வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட 345 பேரில் 64 பேர் தொற்று அறிகுறிகள் உடனேயே நடமாடி வந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் Dubbo,
Burwood மற்றும் Strathfield உள்ளிட்ட ஊரக பகுதிகளில் முடக்க நிலையை மேலும் நீட்டிக்கப் படுகிறது மிகவும் கவனத்துக்குரிய இடங்களாக இவை கண்டறியப்பட்டு அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Fairfield, Canterbury-Bankstown, Liverpool, Blacktown, Cumberland Parramatta, Campbelltown மற்றும் Georges River ஆகிய ஊரகப் பகுதிகளில் இருந்து அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் உரிய முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் பிரிமீயர் உத்தரவிட்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து முடக்க நிலை நீட்டிக்கப்பட்டு வருவதால் பல்வேறு பிரச்சனைகளுக்கு மக்களால் ஆவதாகவும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே அனைவரும் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து வெளிவர முடியும் என்றும் அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் Brad Hazzard கேட்டுக்கொண்டுள்ளார்.
சுகாதாரத் துறையின் உத்தரவுகளை மீறும் நபர்கள் மீது காவல்துறை இதுவரை 407 பேர் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இது தொடரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் 34 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Link Source: shorturl.at/dmyS4