கடந்த 2019 ஆம் ஆண்டு புளு மவுண்டன் பகுதியில் பாலியல் தொழிலாளி ஒருவரை வன்புணர்வு செய்ததாகவும், கேள்வி நேரத்தில் பாலியல் தொழிலாளி ஒருவருக்கு ஆபாச வீடியோவை அனுப்பியதாகவும் இவர் மீது எம்.பி ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது என்று மறுப்பு தெரிவித்த நிலையில், இவர் அனுப்பிய குறுசெய்திகள் மற்றும் வீடியோ தொடர்பான ஆதாரங்கள் வெளியாகின.
இதன் காரணமாக தேசிய கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஜான்சன் தான் குற்றமற்றவன் என்றும் விசாரணையின் முடிவில் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் கிளாடிஸ் பெரிஜிகிளியான், ஜான்சன் ராஜினாமா ஆறுதல் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.