மெல்பேர்ன் நகரத்தை ஒட்டியுள்ள மேற்கு உட்புறப் பகுதியில் புதைக்கப்பட்ட இரண்டு உடல்களை தோண்டி எடுத்து, சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் பென் ஜர்மன் வெளியிட்டுள்ள தகவலின் படி, இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம், ஒரே முறையில் நடைபெற்றுள்ளது.
கடந்த வியாழன் இரவு மற்றும் வெள்ளிக்கிழமை காலை வேளையில் இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளது. இரண்டு சவப்பெட்டிகளை தோண்டி எடுத்துள்ள மர்ம நபர்கள் சிலர், அதிலிருந்த இரண்டு உடல்களும் சேதப்படுத்தியுள்ளனர். குடும்பத்தினரின் கோரிக்கையை கருதி, சேதப்படுத்தப்பட்ட உடல்கள் தொடர்பான விபரங்களை வெளியிட முடியாது.
சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன்மூலம் மர்ம நபர்களை தேடும் பணி துவங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என ஆய்வாளர் ஜார்மன் தெரிவித்த்.
Link Source: https://ab.co/3shvyEQ