மெல்போர்ன் பகுதியில் உள்ள டேண்டியாங் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சலுடன் கர்ப்பிணி பெண்ணான அஸ்வமித் என்பவர் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .
தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கக்கூடிய நிலையில் அஸ்வமிதின் பக்கத்து அறையில் இருந்த கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. அந்தப் பெண் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்று கூறும் அஸ்வமித், இதன் காரணமாக அந்தப் பெண் கடுமையான உடல் நிலை பாதிப்புகளை சந்தித்ததாகவும் தெரிவிக்கிறார். இதை பார்த்ததும் தனக்கும், அதே நிலை ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
ஆனால் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி அவர் முதல் டோஸ் பைசர் தடுப்பு ஊசி எடுத்துக் கொண்டதன் காரணமாக அவர் எதிர்பார்த்த அளவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படவில்லை என்றும் குழந்தையும் மோசமான விளைவுகளில் இருந்து தப்பியதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார் .
மேலும் தன்னைப் போன்றே மற்ற கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அஸ்வமித் வலியுறுத்தியுள்ளார் .
மேலும் மற்ற கர்ப்பிணிப் பெண்களை போல தனக்கும் தடுப்பூசிக்கு எதிரான கருத்து ஆரம்பத்தில் இருந்ததாகவும் தற்போது தடுப்பூசி எவ்வாறு பாதிப்பை குறைக்கிறது என்பதை தன் கண்கூடாக பார்த்ததாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தவித்தது கூடிய மகப்பேறு மருத்துவர்கள் கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கொள்வது அவசியம் என்றும் குறிப்பாக பைசர் போன்ற எம் ஆர் என் ஏ தடுப்பூசிகள் பாதிப்புகளை பெருமளவில் குறைக்கும் என்றும் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வெளியிட்டிருக்க கூடிய பெண்ணின் உண்மையான பெயர் மாற்றப்பட்டுள்ளது தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் தங்களைத் தாக்கக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாக என்னுடைய உண்மையான பெயரை வெளியிட விரும்பவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
Link Source: https://ab.co/3usZGxC