ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ராபர்ட் பீதர் (46) என்கிற நபர், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் ஈராக்கின் பாக்தாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு போலியான குற்றச்சாட்டுகள் முறையிடப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவிலுள்ள அவருடைய குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மாதம் ராபர்ட் பீதர் ஈராக் சிறையில் கொடுமைகள் அனுபவித்து வருவதாக தெரிவித்தது. அதனால் அவரை உடனடியாக ஈராக் அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால் அதுதொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையையும் ஈராக் அரசாங்கம் எடுத்ததாக தெரியவில்லை.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட ராபர் ஃபீதர் மனைவி ஊடகங்களிடம் பேசியுள்ளார். அதில், தன்னுடைய கணவரை ஆஸ்திரேலிய அரசாங்கம் கைவிட்டுவிட்டதாக தெரிகிறது. இதுவரை வெளியுறவுத்துறை அமைச்சர் மாரீஸ் பெய்ன் மற்றும் பிரதமர் ஸ்காட் மோரீசன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.