கடந்த 2020, அக்டோபர் மாதம் பெர்த் பகுதியிலுள்ள நியூ காஸ்ட்ல் மற்றும் பியூவோர்ட் தெரு சந்திப்பில் இடதுபுறமாக பேருந்து ஒன்று திரும்பியுள்ளது. அப்போது சாலையை கடந்து செல்ல முயன்ற 54 வயதான ஜான் ஃபெரிங்க்டன் என்கிற மதிவண்டி பயணி மீது பேருந்து மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே பயணி ஜான் ஃபெரிங்க்டன் உயிரிழந்தார். விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஓட்டுநர் சைமன் வில்லியம் டக்வெல் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதன்மீதான விசாரணையில், நியூ காஸ்ட்ல் மற்றும் பியூவோர்ட் தெரு சந்திப்பில் பேருந்தை திருப்ப முயன்ற போது, முதியவர் சாலையை கடக்க முயன்றதை அவர் கவனிக்கவில்லை என்பது தெரியவந்தது. பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகளை அவர் கவனிக்கவில்லை என்பது உறுதியானது.
குற்றம் நிரூப்பிக்கப்பட்டதை அடுத்து பேருந்து ஓட்டுநர் சைமன் வில்லியம் டக்வெல்லுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் விபத்து ஏற்படுத்தி பயணி உயிரிழக்க காரணமாக இருந்த குற்றத்தை ஓட்டுநர் சைமன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
Link Source: https://ab.co/3GXfu03