ஆஸ்திரேலியாவிலுள்ள டவுன்ஸ்வில்லே பகுதியில் பெய்து வரும் கனமழை குறித்து அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிகவும் கடுமையான மழைப் பொழிவு ஏற்பட்டது.
அதை தொடர்ந்து தற்போது அப்பகுதியில் அதிதீவிரமான மழை பெய்து வருகிறது. குறிப்பிட்ட பகுதிகளில் 300 மி.மீ வரை மழைப் பொழிவு பதிவாகியுள்ளதாக அந்நாட்டிலுள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டவுன்ஸ்வில்லேவில் பெய்து வரும் கனமழையால் அப்பகுதியில் ஓடும் போஹே மற்றும் ஹாடன் ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள மாநில நிர்வாகம், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.