Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட பேரழிவுமிக்க வெள்ளத்தில் சிக்கி ஐந்துக்கும் மேற்பட்ட உயிரிழந்தது மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தது குறித்து மாநில அரசாங்கம் விசாரணை நடத்தவுள்ளது.

The state government is investigating the catastrophic floods in the state of New South Wales that left more than five people dead and thousands displaced.

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்பால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் துவண்டுபோயுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்விழந்து உடைமைகளை இழந்து தவியாய் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.

The state government is investigating the catastrophic floods in the state of New South Wales that left more than five people dead and thousands displaced..அதற்காக ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மைக்கேல் ஃபுல்லர் மற்றும் திட்டக்குழு ஆணையத்தின் தலைவரும் பேராசிரியருமான மேரி ஓ, கேன் தலைமையில் குழு அமைக்கப்படவுள்ளது. அவர்களின் தலைமையில் இதற்கான விசாரணை நடைபெறவுள்ளது. இதுகுறித்து பேசிய மாநில முதலமைச்சர் (பொறுப்பு) பால் டூலே, இயற்கை பேரிடர் மேலாண்மையை மேம்படுத்த எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். அந்த வகையில் இயற்கை பேரிடர் மேலாண்மை தொடர்பாக எங்களுடைய அரசின் முக்கிய நகர்வாக இவ்விசாரணை நடவடிக்கைகள் அமையவுள்ளன என்று கூறினார்.

Link Source: https://ab.co/3ilSxdp