இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பி.சி.ஆர் பரிசோதனையின் போது சரியான முடிவுகள் கிடைக்கப்பெற்றன. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறான முடிவுகள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தவறான முடிவுகள் கிடைக்கபெற்ற அனைவரையும் 3 மணிநேரத்திற்குள் தொடர்பு கொண்டு உரிய விளக்கம் வழங்கப்பட்டது. மேலும் மன்னிப்பு கோரப்பட்டு, பரிசோதனை முடிவுகள் நடந்த குளறுபடிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு பரிசோதனை மையங்களிலும் நாளொன்றுக்கு பலரும் பரிசோதனை மேற்கொள்கின்றனர். முடிவுகள் அறிவிக்கப்படுவதை விடவும், பரிசோதனைகள் நிறைய நடக்கின்றன. இதனால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தவறான முடிவுகள் சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
Link Source: https://ab.co/3JBlbU0