Breaking News

வடக்கு பிராந்தியத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன நபரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. வடக்கு பிராந்தியத்தில் உள்ள டார்செர்டி தீவுப் பகுதி மீன் பிடிப்புக்கு புகழ்பெற்ற தலமாகும்.

சனிக்கிழமை இந்த பகுதியில் ஒரு படகில் 3 பேர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக அந்த படகு ஆற்றில் கவிழ்ந்ததாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஜோசம் போனபோர்டி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, படகில் இருந்த 3 பேரில் இருவர் மீட்கப்பட்டதாகவும், காணாமல் போன பூர்வக்குடி நபரை தேடும் பணி தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
நீர் நிலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தேடுதல் பணி தொடர்வதாகவும், ஹெலிக்காப்ட்டர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த தேடுதல் பணியில் உள்ளூர் காவல்துறையுடன், பூர்வக்குடி மக்களும் பங்கேற்றுள்ளனர்.