நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள கியாமா தொகுதியில் உறுப்பினர் காரத் வார்டு. இவர் பொது இடத்தில் பல முறை கண்ணியமின்றி நடந்து கொண்டதாகவும் மற்றும் இருவேறு சந்தர்ப்பங்களில் 17 வயது சிறுவன், 27 வயதுடைய இளைஞனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
இது ஆஸ்திரேலியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு உறுப்பினர் காரத் வார்டு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதை சட்டரீதியாக சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இருந்து அவரை நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் பால் டூலே தாக்கல் செய்திருந்தார்.
தற்போது அது எந்தவிதமான எதிர்ப்புகளும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர் மீதான கிரிமினல் வழக்குகள் முடியும் வரை இந்த இடைநீக்கம் தொடரும். மேலும் உறுப்பினர் வார்டின் மாத சம்பளம் மற்றும் சலுகைகளை நிறுத்துவதற்கான முயற்சிகளையும் நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு மேற்கொண்டுள்ளது.
Link Source: https://ab.co/3tzX2ay