கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் பல மாதங்களாக அமலில் இருந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகளிடையே அதிருப்தி நிலவி வருகிறது. இதை எதிர்த்து கனரக வாகன ஓட்டுநர்கள் உட்பட பலரும் கடந்த 3 வாரங்களாக ஒட்டாவா டவுண்டவுன் பகுதியில் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் அதிரடியாக புகுந்து போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். போராட்டத்துக்கு தலைமை தாங்கி வந்த 3 பேர் உட்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஒட்டாவா பகுதியை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் பொதுமக்கள் பலர் போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒட்டாவா மாநிலம் முழுவதும் பதற்றம் நீடிப்பதாக கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link Source: https://ab.co/36rsf6H