Breaking News

வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து பெர்த்தில் செயல்பட்டு வரும் உயர்நிலைப் பள்ளி இரண்டு வாரங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியிலுள்ள பள்ளியில் ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள உயர்நிலைப் பள்ளி இரண்டு வாரங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மூடப்படும் இரண்டு வாரங்களும் முறையாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதியிலுள்ள புகழ்பெற்ற லோனோ பெர்ஷண்டேஷன் கல்லூரியில் ஒரு பேராசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியரிடன் பெற்றோர்களிடையே பதற்றமான நிலை நீடிக்கிறது.

Link Source: https://ab.co/34pYRNn