இதனால் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் சுகாதார பணியாளர்கள், தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் தொடர்ந்து போட்டுக்கொள்ள அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். இதனை அங்குள்ள மருத்துவத்துறை ஆய்வாளர்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஆனால் அதை விடுத்து மக்களை சுகாதார பணியாளர்கள் தவறாக வழி நடத்துகின்றனர். தொற்று பாதிப்பை காட்டி அச்சுறுத்தி கூட்டம் சேர்க்க பார்க்கின்றனர். இதனாலும் தொற்று மேலும் பரவக்கூடும் என அவர்கள் எச்சரிக்கை தெரிவிக்கின்றனர்.
தொற்று பாதிப்பு ஏற்பட்டு, அறிகுறிகள் தென்பட்டாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். பாதிக்கப்பட்டவர்கள் தனிமையில் இருந்து குணமடைந்து பின்பு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மக்களை அச்சுறுத்துவது சுகாதார பணியாளர்களின் நோக்கமாக இருக்கக்கூடாது என ஆய்வாளர்கள் அறிவுரை கூறியுள்ளனர். கோவிட் தொற்று மற்றும் இன்ஃப்ளுயன்ஸா வைரஸுக்குரிய இரண்டு தடுப்பூசிகளை ஒரேநாளில் போட்டுக்கொள்ளலாமா என்கிற கேள்வியை பலர் முன்வைக்கின்றனர். அதற்கு ஆஸ்திரேலியாவின் மூத்த வழிக்கறிஞர் மெக்கே, இரண்டு வைரஸ்களுக்குமான தடுப்பூசியை போட்டுக்கொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அதுகுறித்து மருத்துவ கவுன்சில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவது கட்டாயம் என்று தெரிவித்துள்ளார்.