திங்கட்கிழமை இரவு 9:30 மணி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,02,30,708 ஆக அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகளவில் 2 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருந்த நிலையில், தற்போது இந்தியாவும் அந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,21,508 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இரவு 9 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,10,845 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஸ்டிராவில் 48,621 பேரும், கேரளாவில் 44,438 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்ச உயிரிழப்பு மகாராஸ்டிரா மாநிலத்தில் 567 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Link Source: https://bit.ly/3egUWVy