Breaking News

தனிப்பட்ட வகையில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The man, who was repeatedly stabbed and wounded in a private attack, is being treated in intensive care.

கான்பெர்ராவிலுள்ள கிங்க்ஸ்டன் தெற்கு கடற்கரைப் பகுதியில் படகில் வந்த சிலருக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது தனிப்பட்ட வாக்குவாதத்தின் போது நபர் ஒருவர் பலமுறை கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார்.

The man, who was repeatedly stabbed and wounded in a private attack, is being treated in intensive care..உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மருத்துவ உதவியுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு அந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். எனினும், அந்த நபரின் உடல்நிலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கிங்க்ஸ்டன் கடற்கரைப் பகுதி காவல்துறையினர், பிரச்னையில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களில் இருந்து வீடியோக்களை சேகரித்து போலீசார் தங்களுடைய முதற்கட்ட விசாரணையை துவங்கியுள்ளனர்.

Link Source: https://ab.co/3KmEWhU