Breaking News

முன்னாள் காதலரின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிடுவேன் என்று மிரட்டிய நபருக்கு சிறை தண்டனை விதிக்காமல் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார்

The man who threatened to release a private photo of his ex-boyfriend has been sent a warning without being jailed.

மெல்பேர்னைச் சேர்ந்தவர் மார்டின் என்கியூயென் (30). இவரை பெண் ஒருவர் காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக காதலை முறித்துக் கொண்டனர். எனினும், மீண்டும் காதலியுடன் பேசுவதற்கு மார்டின் முயற்சித்துள்ளார்.

ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த மார்டின், காதலிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். தங்கள் இருவரும் தனிமையில் இருந்த புகைப்படத்தை காதலியின் பெற்றோர், சகோதரர் உள்ளிட்டோருக்கு அனுப்பிவிடுவேன் என மார்டின் மிரட்டியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த காதலி இதுகுறித்து போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் மார்டினை அழைத்து விசாரித்தனர். அதை தொடர்ந்து இனிமேல் இப்படி நடந்துகொள்ளக் கூடாது என எச்சரித்து அனுப்பினர்.

Link Source: https://ab.co/3rGT5jv