ஆஸ்திரேலிய அரசு தன்னுடைய Howard Springs தனிமைப்படுத்தும் வசதிகளை 2000 மக்களுக்கு விரிவுப்படுத்த உள்ளதாகவும், ஆனால் அதற்கு முன் சர்வதேச எல்லையை திறப்பதாக இல்லை என்ற செய்திகள் வெளிவந்துள்ளது.
தேசிய அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து Scott Morrison கூறுகையில், சர்வதேச எல்லையை ஜூன் மாதம் வரை திறக்காமல் இருப்பதே நல்லது. மேலும் Howard Springs 2000 மக்களுக்கு விரிவுப்படுத்தப்படும். இது அடுத்த சில மாதங்களில் முடிவடையும். பல மாதங்களாக பல இடங்களில் இருந்த chartered விமானங்களை திரும்பி ஆஸ்திரேலியாவிற்குள் வர உதவும். அங்கு தான் மக்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
சர்வதேச எல்லைகளில் ஒருமித்த கருத்து இருப்பதாகவும், உள்நாட்டு பயணமும் மற்றும் உள்நாட்டு பொருளாதாரமும் உலகம் முழுவதும் இயல்பு நிலைக்கு வரும் முன்னர் உயர்ந்திருப்பதை தான் பார்க்க ஆசைப்படுவதாகவும் கூறினார்.
இத்திட்டத்தில் வெளிநாட்டு மாணவர்களின் கல்வியும் அடங்கும். அந்த நிதியுதவி தொகை தனிமைப்படுதலுக்கான செலவுக்காக பயன்படும். சர்வதேச கல்வித்துறையுடன் பணிபுரிவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் அவர்கள் விரும்பினால் நாங்கள் தனிமைப்படுத்துதல் ஏற்பாட்டையும், விமான ஏற்பாடுகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும், எப்போதும் சர்வதேச கல்வித்துறை மற்றும் பிற பெரிய பல்கலைக்கழகத்திற்கு செல்ல வழி இருந்தும் யாரும் அதில் செல்ல தேர்வு செய்யவில்லை என்றார்.