Breaking News

உள்நாட்டு பழங்குடி மக்களின் நெருக்கடியை சரிசெய்ய அரசாங்கம் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது !

The government has been accused of failing to address the plight of indigenous peoples

450 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மற்றும் Torres Straight தீவு மக்கள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு
முன்பு அரசு அறிக்கை வெளியிட்டதிலிருந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

The government has been accused of failing to address the plight of indigenous peoples 1காவலில் ஏற்படும் இறப்புகளின் நெருக்கடியை சரி செய்ய அரசாங்கம் தவறிவிட்டதாக உள்நாட்டுச் செனட்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வெள்ளிக்கிழமை காவலில் உள்ளே இறப்புகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அரசு வைத்திருக்கவில்லை. புள்ளி விவரங்களுக்கு மத்திய அரசின் பதில் குறித்த விசாரணையில் தொழிலாளர் Senators Patrick Dadson மற்றும் Malarndirri McCarthy விரக்தியை வெளிப்படுத்தினர்.

இந்த ஏப்ரல் மாதம் காவலில் உள்ள பழங்குடியின மக்களின் மரணங்களுக்கு அரசு ஆணையம் 339 பரிந்துரைகளை வழங்கினால் இது ஆணையம் செயல்படுத்தி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும். இந்தப் பரிந்துரைகள் மாநிலங்களாலும், காமன்வெல்த் மூலமாகவும் செயல்படுவதில் மிகவும் பயனுள்ளதாக இருந்திருந்தால் அரசு ஆணையத்தில் இருந்து 500 பேர் ஏன் இறந்தார்கள்? என Dadson கேள்வி எழுப்பினார் .

Barkindji மனிதர் Anzac Sullivan இறந்தது தெரிய வந்து ஒரு நாளுக்கு பின் இந்த விசாரணை வந்தது. ஆஸ்திரேலியா காவலில் மூன்று வாரங்களில் இறந்த நான்காவது பழங்குடி நபர் இவர் ஆவார்.

Amanda Stoker australiaதொழிலாளர் செனட்டர் Amanda Stoker கூறுகையில், Dadson தெரிவித்த குற்றச்சாட்டுகளின் கவலைகளை சரிசெய்வதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை பாதுகாத்து மேலும் கோபம் மற்றும் வருத்தம் உண்மையானது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். எங்கள் நீதி அமைப்பின் மூலம் ஒவ்வொரு நபரின் வாழ்க்கையும் மிக முக்கியமானது, அவர்களின் தோளின் நிறம் என்னவாக இருந்தாலும் சரி, என அவர் கூறினார். அவர்கள் இங்கு வாழும் மனிதர்கள் மற்றும் ஆஸ்திரேலியர்கள் எனவும் கூறினார்.

காவலில் ஏற்படும் இறப்புகளை அரசாங்கம் கண்காணிப்பது குறித்து ஆஸ்திரேலியர்கள் NIAA அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். ஆஸ்திரேலிய குற்றவியல் நிறுவனம் கூறிய இறப்புகள் பற்றிய பதிவுகளை ஊடகங்கள் நம்பியுள்ளதாக NIAA அதிகாரிகள் தெரிவித்தனர். புள்ளி விவரங்களைப் பற்றி நாங்கள் நன்கு அறிவோம் என Deby Mitchell கூறினார்.

Blair EXellNIIA -ன் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி Blair EXell, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அமைச்சர்களின் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 2031-க்குள் இறப்புகளை குறைப்பதற்கான இலக்குகளை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

அரசாங்கம் தனது முயற்சிகளை செயல்படுத்தப்படவிட்டால் மற்றொரு அரசாணையும் தேவைப்படும் என செனட்டர் Dadson கூறினார். செனட்டர் Sroker-ஐ நெருக்கடிக்கு தீர்வு காண தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் இது ஒரு முழுமையான ஊழல் எனவும் கூறினார்.

மத்திய அரசு தனது பொறுப்பை கைவிட்டதாக செனட்டர் McCarthy குற்றம் சாட்டினார். எங்கள் நாட்டின் மக்கள் தேவை இல்லாமல் இறந்து கொண்டிருக்கும் இந்த பிரச்சனைக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை மேலும் இதைக் கடந்து செல்கிறார்கள் எனவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.