பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்றுக்கு தீர்வு காணும் பொருட்டு மார்டனா நிறுவனம் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. இதற்காக ஆஸ்திரேலிய அரசை அணுகிய அந்நிறுவனம், விக்டோரியா மாகாணத்தில் ஆலையை நிறுவ முடிவு செய்தது.
இந்தாண்டின் தொடக்கத்தில் ஆலையை கட்டுவதற்கான பணிகள் துவங்கப்படவுள்ளன. வரும் 2024-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான பேசிய ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கான மார்டனா நிறுவனத்தின் பொது மேலாளர் மைக்கேல் அசார்க், தடுப்பூசி தயாரிப்பில் ஆஸ்திரேலியா ஒரு முன்னோடி நாடாக இருக்கப்போகிறது. எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிக்கான அடுத்தக்கட்ட வளர்ச்சியை நிறுவும் நாடாக ஆஸ்திரேலியா இருக்கும்.
Link Source: https://ab.co/3NkkeBk