பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வந்த உடன் தனக்கான இருக்கையில் அமர்ந்த ரொனால்டோ தன் முன்னாள் இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கோக்க கோலா குளிர்பான பாட்டில்களை பார்த்தார்.
உடனடியாக அந்த இரண்டு கோக்க கோலா பாட்டில்களையும் எடுத்த ரோனால்டோ அதை மேஜையை விட்டு அகற்றி கீழே வைத்தார். மேலும், தனக்கு அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ’தண்ணீர் குடியுங்கள்’ என்று கூறினார்.
இந்த நிகழ்வு உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. கோக்க கோலா குளிர்பானத்தை அகற்றிவிட்டு தண்ணீர் குடியுங்கள் என கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவுறுத்திய சில நிமிடங்களில் கோக்க கோலாவின் சந்தை மதிப்பு பெரும் சரிவை சந்தித்தது.
கோக்க கோலா நிறுவனம் சுமார் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது.
கோக்க கோலா , பெப்சி நிறுவனங்கள் அமெரிக்காவில் தொடங்கப்பட்டிருந்தாலும், அது இன்று உலகம் முழுவதும் பரவி தனக்கென ஒரு பெரும் வாடிக்கையாளர் கூட்டதையே உருவாக்கியுள்ளது.
ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் கோடி சம்பாதிக்கும் இந்த கோக்க கோலா மற்றும் பெப்சி நிறுவனம் தொடக்கத்தில் ஒரு தலைவலி மருந்தாகவும், பெப்சி வயிற்று வலி மருந்தாகவும் விற்க்கப்பட்டது என்றால் ஆச்சர்யமாக உள்ளது.
இன்று இதற்கென இருக்கும் வாடிக்கையாளர்கள் பலர் தண்ணீருக்கு பதில் கோலா பானங்களை குடிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் உடல் பருமன், சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
முதலில் கோக்க கோலா வரலாற்றை பார்க்கலாம்.
மே 1886 ல், கோகோ கோலா அமரிக்காவில் உள்ள ஜோர்ஜியாவிலிருந்து மருத்துவர் டாக்டர் ஜான் பெம்பர்ட்டன் ஒரு மருந்தாளர் கண்டுபிடித்தார். தொடக்கத்தில் இதனை ஒரு தலைவலி பானமாகவே கடைகளில் விற்கப்பட்டது. நாளைடைவில் இதன் ருசி மக்களுக்கு பிடித்து விடவே இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகி இன்று பல்லாயிரம் கோடிகள் ஈட்டும் ஒரு பன்னாட்டு குளிர்பானமாக உள்ளது.
அதே போல பெப்சி நிறுவனமும் ,முதலில் வயிற்று வலி மருந்தாக விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.