சிட்னி ப்ளாக்டவுன் உயிரியல் பூங்காவில் சிம்பன்சி மோக்லி அதன் வாழ்விடத்திலேயே உயிரிழந்து கிடந்ததை பூங்கா ஊழியர் வெள்ளியன்று காலை பார்த்துள்ளார். பூங்கா இதனை உறுதி செய்து மோக்லி உயிரிழந்த அதிர்ச்சி செய்தியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
வெள்ளியன்று பூங்காவுக்கு வந்த பார்வையாளர்கள் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டனர். மோக்லியின் உடல் பாதுகாப்பாக வெளியேற்றப்படும் வரை அவர்கள் காரிலேயே காத்திருக்குமாறு பூங்கா நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், உயிரிழந்த சூழல் குறித்த உரிய விசாரணை நடத்தி பின்னர் விரிவாக தகவல் தெரிவிக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பூங்கா ஊழியர்கள், பார்வையாளர்கள் மோக்லியின் மறைவு குறித்து தங்களது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தினர்.