Breaking News

நண்பர்களுடன் கேளிக்கை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த சிறுவன் அடையாளம் தெரியாத மர்ம கும்பலால்பல முறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The boy, who was attending a party with friends, was stabbed several times by an unidentified mysterious mob..

மெல்பேர்ன் வடக்குப் பகுதியில் இருக்கும் இடம் டாக்லேண்டு. இங்கு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கலந்துகொண்டுள்ளான். அதே நிகழ்ச்சிக்கு அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வந்துள்ளது

The boy, who was attending a party with friends, was stabbed several times by an unidentified mysterious mob.அப்போது அவர்களுக்கும் சிறுவனுக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவன் தன் நண்பர்களுடன் நிகழ்ச்சியில் இருந்து சென்றுவிட்டான். அவர்களை அந்த கும்பல் காரில் துரத்திச் சென்றுள்ளது. சிறுவனை பிடித்த அந்த கும்பல், பலமாக தாக்கியுள்ளது. மேலும் கத்தியால் சிறுவனை பலமுறை அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் குத்தியுள்ளனர். இதையடுத்து சிறுவனுடன் இருந்த நண்பர்கள் அவர்களை தாக்கியுள்ளனர். அவர்களும் அந்த கும்பலில் 23 வயது இளைஞன் ஒருவரை குத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் இளைஞன் இறந்துவிட, 16 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலை மீட்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் தொடர்பான விக்டோரியா மாகாண போலீஸார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

Link Source: https://ab.co/3IqHLgB