சாலமன் தீவுகளில் பணியாற்றும் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினருக்கு போர் பயிற்சிகளை வழங்குமாறு அந்நாடு சீனாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து சீனாவின் சிற்பபு பிரிவைச் சேர்ந்த ராணுவத்தினர் சாலமன் தீவுகளுக்கு வரவுள்ளனர்.
இதற்கான உடன்படிக்கைகளை இருநாடும் மேற்கொண்டுள்ளது. அதுதொடர்பான ஆவணங்கள் சில ஆஸ்திரேலிய அரசுக்கு கிடைத்துள்ளது. சாலமன் தீவுகளில் கப்பலைப் பார்வையிடவும், தளவாட நிரப்புதல்களை மேற்கொள்ளவும், அந்நாட்டைச் சுற்றியுள்ள துறைமுகங்களில் மாற்றம் செய்யவும் சீனா முடிவு செய்துள்ளதாக ஆஸ்திரேலியா கருதுகிறது. இதனால் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என மத்திய அரசு கருதுகிறது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் கரேன் ஆண்ட்ரூஸ், பசிபிக் கடல் பகுதிகளில் சீன ராணுவ நடவடிக்கை விரிவடைவதை ஆஸ்திரேலிய அரசாங்கம் கருத்தில் கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3tB2ZUH